அந்த அறைக்குள் மிக இறுக்கமான அமைதி நிலவுகிறது.... முதுகு தண்டை சில்லிட வைக்கும குளிர் அந்த அறையில் நிறைந்திருக்கிறது. சில பேர் அங்கு காத்திருக்கிறார்கள்... அந்த அறைக்கு வெளியே காலணிகள் கழற்றி வைக்கபட்டுள்ளது. இன்னும் சில பேர் தங்கள் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு மிகுந்த பய பக்தியுடன் அந்த அறைக்குள் வருகிறார்கள். யாரும் யாரிடமும் பேசவில்லை... ஒருவருக்கொருவர் கண்களால் பேசிகொள்கிறார்கள். காரணம் இன்னும் சிறிது நேரத்தில் அந்த அறைக்கு "கடவுள்" வரப்போவதாக அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது. கடவுளின் "வாசனையை அவர்கள் நுகர்வதற்காக வாசனை திரவியங்களையோ, பூக்களையோ அணிந்திருக்க அந்த அறைக்குள் தடை செய்யப்பட்டு இருந்தது. "சற்று நேர காத்திருப்புக்கு பின்பு "கடவுள்" வருகிறார். அனைவரும் அவரையே ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.. "கடவுளை" அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கு வயதானவர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் முதலில் "கடவுளின்" அருகில் சென்று சில வினாடிகள் அவரை தொட்டு பார்த்து விட்டு, சுற்றி இருந்தவர்களை "கடவுளின்" அருகில் அழைக்கிறார். அவர்களும் ஒருவர் ஒருவராக "கடவுளின்" அருகில் வந்து அவரை தொட்டு பார்கிறார்கள். "கடவுளை" எல்லோரும் வெறும் கையால் மட்டுமே தொட்டு பார்க்க அனுமதிக்கபடுகிறார்கள். அனைவரும் "கடவுளை" ஆசை தீர தொட்டு பார்கிறார்கள். அந்த .....
அய்யோ ... அய்யயோ .... நிப்பாட்டுயா உன் பொங்கசோர ... யாருய்யா அந்த "கடவுள்" அப்பிடீங்கரீங்களா?
இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு "உடல் கூறு" பற்றி படிக்க கொடுக்கப்படும் உயிரற்ற மனித உடல்களே "கடவுள்" என்று அழைகப்படுகிறது.
அங்கு "கடவுளுக்கு" அளிக்கப்படும் 'மரியாதை' மிக அதிகம். "கடவுள்" மருதுவமனைக்கு வந்தவுடன் அவர் உடலில் உள்ள ரத்தம் முதலில் ஊசி மூலம் முழுவதுமாக எடுக்கப்பட்டு விடுகிறது. பின்பு "பார்மலின் திரவம்" முழுவதுமாக நிரப்பப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கையுறை எதுவும் அணியாமல் தங்களுடைய வெறும் கைகளினால் மட்டுமே அவருடைய உடலை தொடவும், சோதிக்கவும் அனுமதிக்கபடுகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு "கடவுள்" கிடப்பது மிகவும் கஷ்டமாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதாக சொன்னவுடன் நிறைய பேர் தங்களது உடலையையும் கொடுப்பதாக சொல்லி அதன் பேரில் தற்போது "கடவுளின்" வருகை அதிகரித்து உள்ளதாம். சினிமா ரசிகர்கள் எல்லாம் "விசிலடிச்சான் குஞ்சுகள்" மட்டும்தான் என்ற கருத்துள்ளவர்கள் இந்த செய்தி படித்த பின்பாவது தங்களது கருத்துக்களை மாற்றிகொள்ள வேண்டும். உடலை தானமாக கொடுக்க, தானம் கொடுப்பவர் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் சம்மதமும் வேண்டும். இயற்கையாக இறந்தவர் உடலே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளபடுகிறது. உடல் ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்வதற்கு முன்பாக உறவினர்கள் கேட்டுகொண்டால் உடல் அவர்களிடம் திரும்ப அளிக்கப்படும். சமீபத்தில் தமிழக துணை முதல்வர் "ஸ்டாலின்" மற்றும் அவரது துணைவியார் தங்களது உடலை தனமாக எழுதி தந்துள்ளனர். இறப்புக்கு பின்பு யாருக்கும் பயனற்று போகும் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுத்து "கடவுளாக" மாறுங்கள்!!!
அய்யோ ... அய்யயோ .... நிப்பாட்டுயா உன் பொங்கசோர ... யாருய்யா அந்த "கடவுள்" அப்பிடீங்கரீங்களா?
இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு "உடல் கூறு" பற்றி படிக்க கொடுக்கப்படும் உயிரற்ற மனித உடல்களே "கடவுள்" என்று அழைகப்படுகிறது.
அங்கு "கடவுளுக்கு" அளிக்கப்படும் 'மரியாதை' மிக அதிகம். "கடவுள்" மருதுவமனைக்கு வந்தவுடன் அவர் உடலில் உள்ள ரத்தம் முதலில் ஊசி மூலம் முழுவதுமாக எடுக்கப்பட்டு விடுகிறது. பின்பு "பார்மலின் திரவம்" முழுவதுமாக நிரப்பப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கையுறை எதுவும் அணியாமல் தங்களுடைய வெறும் கைகளினால் மட்டுமே அவருடைய உடலை தொடவும், சோதிக்கவும் அனுமதிக்கபடுகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு "கடவுள்" கிடப்பது மிகவும் கஷ்டமாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதாக சொன்னவுடன் நிறைய பேர் தங்களது உடலையையும் கொடுப்பதாக சொல்லி அதன் பேரில் தற்போது "கடவுளின்" வருகை அதிகரித்து உள்ளதாம். சினிமா ரசிகர்கள் எல்லாம் "விசிலடிச்சான் குஞ்சுகள்" மட்டும்தான் என்ற கருத்துள்ளவர்கள் இந்த செய்தி படித்த பின்பாவது தங்களது கருத்துக்களை மாற்றிகொள்ள வேண்டும். உடலை தானமாக கொடுக்க, தானம் கொடுப்பவர் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் சம்மதமும் வேண்டும். இயற்கையாக இறந்தவர் உடலே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளபடுகிறது. உடல் ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்வதற்கு முன்பாக உறவினர்கள் கேட்டுகொண்டால் உடல் அவர்களிடம் திரும்ப அளிக்கப்படும். சமீபத்தில் தமிழக துணை முதல்வர் "ஸ்டாலின்" மற்றும் அவரது துணைவியார் தங்களது உடலை தனமாக எழுதி தந்துள்ளனர். இறப்புக்கு பின்பு யாருக்கும் பயனற்று போகும் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுத்து "கடவுளாக" மாறுங்கள்!!!

