அன்றும் வழக்கம் போல் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன்.... அம்மாதான் ஞாபகபடுத்தினாள். இந்த வாரம் முக்கியமான வேலை எல்லாம் இருக்கு.. ஆபீஸ் வேலய கொறசுக்கோ... நேரத்தோட வீட்டுக்கு வந்திருபான்னாங்க, சரின்னுதான் சொன்னேன்.. இருந்தாலும் வேல நம்மள விட்டாதானே ... ஒரு பி.எச்டி வேலை ... சத்தியானு ஒரு பொண்ணு ... பாடகர் ஹரிகரன் சொந்த அக்கா பொண்ணு... மதுரைல நம்ம ஏரியா.. இறுதி கட்ட வேலை இரண்டு நாளில் முடியும் என்று எதிர்பார்த்து முடியல... மறுநாள் வீட்ல விசேஷம்... இரவு முழுவதும் வேலை பார்த்தும், காலை மணி ஆறு ஆகிவிட்டது. வீட்டல இருந்து போன்... அம்மாதான் பேசினாள்... எல்லோரும் வந்துடாங்க.. இதுக்கு மேல லேட் பண்ணாத... உடனே வா... முக்கியமா, சென்னைல இருந்து அக்கா-மாமா வந்தாச்சு அப்டீனாங்க. நானும் சத்தியாவிடம் சொல்லிட்டு கிளம்பலாம்னா, துணைக்கு வந்திருந்த அவங்க அப்பாவும், அந்த பெண்ணும் என் கால்ல விழாத குறையா ... சார், இன்னைக்குதான் கடைசி ... நீங்க இப்போ போய்ட்டு, குளிச்சுட்டு, சாப்டுட்டு உடனே வந்துருங்க அப்டின்னு சொன்னாங்க ... இல்லைங்க, அது ரொம்ப கஷ்டம்ங்க ... நம்ம ஆபீஸ்ல உள்ளவங்க மீதி உள்ள உங்க வேலைய நல்லபடியா முடிச்சு தருவாங்க .. நான் திரும்ப வர இரண்டு மூணு நாள் ஆகும்னு சொல்லி பார்த்தேன்... அப்புறமும் அவர்கள் மசிவதாக இல்லை... அவங்க அப்பா, சார் நீங்க தான் முடிச்சு தரனும்... கொஞ்சம் திரும்ப வந்தீங்கன்னா சாயங்காலதுக்குள்ள முடிச்சுடலாம் அப்படீன்னார்... அப்பதான், நான் சொல்ல வேண்டியதாகிவிட்டது ... அய்யா எனக்கு நாளைக்கு காலைல கல்யாணம்.. இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு .. சொந்தகாரங்க எல்லோரும் வந்து, எங்க வீட்ல வெயிட் பண்றாங்க... அதுனால நான் இப்போ வீட்டுக்கு போக வேண்டி இருக்குதுன்னு உண்மைய சொன்னேன் .... பதறி போன அவர் ... சாரி சார், உடனே கிளம்புங்கனு சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
இது நடந்து ஆறு ஏழு வருடங்கள் கழித்து சத்தியாவின் அப்பாவை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தேன்... அப்போது அவர் என் நண்பரிடம் என்னை பற்றி சொல்லும் போது, இவர் மட்டும் அன்னிக்கு உண்மைய கடைசி வரைக்கும் சொல்லாம இருந்துருந்தா, இவர வீட்டுக்கு போக விட்டுருக்கமாட்டேன். நல்ல வேலை ஒரு கல்யாணம் என்னால நிற்க தெரிஞ்சது.. அப்படீன்னார்.
என்ன செய்வது?..உண்மை பேசினாலும் சில சமயம், தெய்வம் நம்மள தண்டிக்குதே??!!!
இது நடந்து ஆறு ஏழு வருடங்கள் கழித்து சத்தியாவின் அப்பாவை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தேன்... அப்போது அவர் என் நண்பரிடம் என்னை பற்றி சொல்லும் போது, இவர் மட்டும் அன்னிக்கு உண்மைய கடைசி வரைக்கும் சொல்லாம இருந்துருந்தா, இவர வீட்டுக்கு போக விட்டுருக்கமாட்டேன். நல்ல வேலை ஒரு கல்யாணம் என்னால நிற்க தெரிஞ்சது.. அப்படீன்னார்.
என்ன செய்வது?..உண்மை பேசினாலும் சில சமயம், தெய்வம் நம்மள தண்டிக்குதே??!!!

No comments:
Post a Comment