Saturday, November 7, 2009

Maddi மணி, Maddi முரளி

அது ஒரு கோடை காலம் .... எட்டோ ஒன்போதோ படித்து கொண்டு இருந்த நேரம்.... இப்பலாம் எங்க அப்பா, அம்மாவ எதிர்பர்காம.... எங்க ஊர்ல இருந்து, நானும், ரகுவுமா கிளம்பி போடி வர்ற அளவுக்கு வாழ்கைல பயங்கர முன்னேற்றம். அப்ப இந்த நர்மதா பொண்ணு பொறந்து, அதுக்கு ஒன்னு, ரெண்டு வயசு இருக்கும். எங்க அக்காவும் ரெண்டு பிள்ளைகளோட போடியிலதான் இருந்துச்சு. மாமா "சிக"வாசில (sivakasi - அப்படித்தான் நர்மதா பொண்ணு சொல்லும்) பேங்க் வேலைல இருந்தாரு. அக்கரகாரதுல line ஆ முதல்ல கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா வீடு அடுத்து ராமமூர்த்தி பெரியப்பா வீடு, அடுத்து அத்தை வீடு, அப்புறம் எங்கவீடு அடுத்து அடுத்து இருக்கும். பத்தும் பத்தாததுக்கு எதிர்த்த வீடு பெரிய வீடு (தமிழ் பண்டிதர்). அவர் மனைவி குப்பி மாமி (நானும் ரகுவும் சின்ன பசங்கள இருக்கும் போது குறத்தி வாடி என் குப்பின்னு பாடி அவங்க கிட்ட செல்ல டோஸ் வாங்கியது ஞாபகம் இருக்கு, அவங்க பழைய டால்டா டின்ல கரி அடுப்பு செய்றதுல எக்ஸ்பர்ட்) ஒரு தவக்கா, அப்படிதான் போடிக்கு நைட் போய் ஊர் சேர்ந்து .... சாப்ட்டு விட்டு இந்த நிம்மி, நம்மா கூட பேசி சிரிச்சுட்டு அப்டியே தூங்கி போய்டோம். தீடிர்னு அதி காலையில மூணு மணி இருக்கும், எதோ பாத்திரம் உருட்டுற சப்தம் கேட்டு, போய் பார்த்தா செல்லமா பெரியம்மா சூடா இட்லி ஊத்தி கொடுக்க இந்த குட்டி பொண்ணு நர்மதா சட்டமா உக்காந்து சாப்ட்டுகிட்டு இருக்குது.. என்ன பெரியம்மா மணி மூணு தான் ஆகுது இப்ப போயி, அபடின்னதுகு, பெரியம்மா, சின்னவ "புர்ரட்சி" பசின்னு எழுபின்னா அதுதான்னாங்க... (பாசகார பாட்டி). காலயில அன்னிக்கு பத்து மணிக்கெல்லாம் சூப்பர் சாப்பாடு செல்லமா பெரியம்மா கையாள... மணக்க, மணக்க திராட்ச கொத்து மாதிரி இருக்கும் வடு மாங்கா போட்டு மோர் சாப்பாட முடிச்சுட்டு எல்லோரும் உண்ட மயக்கத்துல .. ஆளுக்கு ஒரு பக்கமா hall -யே சாஞ்சிடோம். மணி தான் வந்து என்னை எழுபினான். வெயில் ஏற ஏற அவனுக்குத்தான் இருப்பு கொள்ளாதே! எந்திரி எந்திரி போடி மெட்டு வரைக்கும் போகலாம் வாங்காடானு கூப்பிட்டான். கண்ணன், ரவி, ரகு யாருமே அதுக்கு தயாரில்லை. இருந்தாலும் அவன் இம்சை தாங்காம, இந்தோ முரளிய கைபத்திகிட்டு நீ முன்னால போயி கிட்டே இரு.. நாங்க மூணு பேரும் பின்னாலேயே வந்துடுறோம்னு சொன்னத நம்ம்பி நானும் மணியும் புதிய உத்வேகத்தோட ஐந்துலான்தல் பக்கத்துல சைக்கிள் வாடகைக்கு எடுத்துகிட்டு சிட்டா பறந்துட்டோம். நாங்க புறப்படும் போது, அப்பதேன் அவிங்க மூணு பேரும் சைக்கிள் வாடகைக்கு பேசிகிட்டு இருந்தாங்க. மொத பத்து கிலோ மீட்டர் ஒரே வேகம்தான் ... அடுத்து ரோடு மல ஏற ஏற மூச்சு வாங்கி மிதிக்க முடியாம மிதிச்சு, பெடல் கட்ட பிஞ்சு போயி .... ஒரு அஞ்சாறு ஹேர்பின் வளைவுகளை கூட தண்ட முடியாமல் ... ஒரு ஓரமா ஓஞ்சு போயி உட்கார்ந்துட்டோம்.. (சரியான மே மாத வெயில்) அப்பதான் கவனிச்சோம் ... பக்கத்தில ஒரு சூப்பர் ஓடைய .... நல்லா குளிச்சுட்டு ... உக்காந்து யோசிச்சோம்... இன்னும் மேல போறதுக்கு வேறு வழி இல்லாமல் திரும்ப வேண்டியதாகி விட்டது. வந்து பார்த்த நாங்க ரெண்டு பேரும் எந்த நிலைமைல அந்த மூணு பேரையும் விட்டு போனோமோ அதே போஸ்ல மூணு பேரும் சூப்பரா படுத்து நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தைங்க.. எங்க ரெண்டு பேரையும் உசுபேத்தி, பின்னாடியே வர மாதிரி படம் காண்பிச்சு தொரத்தி விட்டு இம்சைக ஒழிந்ததுன்னு படுத்துட்டு இருந்தவைங்கள பார்த்து எங்களுக்கு கோபமே வரலையே ... ஏன்னா எங்களுக்குதான் கோபப்பட கூட சக்தி இல்லையே!!!! நாங்க போடி மேட்டுக்கு போயி சுத்தி பார்ததா விட்ட ரீலயாவது அவிங்க மூணு பேரும் ஒத்துகிட்டு இருந்திருந்தால் இப்ப இந்த post கே அவசியம் இல்லை. இதுல அடுத்து வந்த ரெண்டு நாளைக்கு இத சொல்லியே எங்க ரெண்டு பேரயும் ஓட்டிகிட்டு இருந்தைங்க. ஆனா ஒண்ணு.... சரோஜா பெரியம்மாதான் கரெக்டா சொன்னாங்க... Maddi மணி, Maddi முரளி.

1 comment:

  1. I am surprised to see that my comments are not saved. I cant recall what I wrote then. "But I could feel bodi in all 5 my senses after reading this post. Saroji athai 'nach' nu punch dialogues ellam super a solluvaanga

    ReplyDelete