மும்மூர்த்திகள் (ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி) என்றுதான் சொல்ல வேண்டும்... எல்லோரும் மாதிரி அண்ணன் தம்பிகள் தான் ... இருந்தாலும் அவர்களிடையே இருந்த பாசமும், அன்யோன்யுமும் எல்லோரிடமும் பார்க்க முடியாது. மூன்று பேரும் சேர்ந்தாசுன்னா ஒரே பேச்சுதான்... அப்படி என்னதான் பேசுவாங்களோ! வாழபழத்த சீப்பு சீபா வாங்கி வெச்சுகிட்டு ரூமுக்குள்ள மூணு பேரும் போய்ட்டா, இந்த உலகத்தையே மறந்திடுவாங்க.... சிரிப்பு சத்தம் மட்டும்தான் கேட்கும். சாயங்காலம் ஆச்சுனா மூணு பேரும் சேர்ந்து கடை வீதிகோ அல்லது ஆத்துகோ போவார்கள்... அப்போதும் ஒரே சிரிப்புதான். மூவரும் சேர்ந்து அவர்களுடைய அம்மாவிற்கு வைக்கும திவசம் ஒரு பெரிய திருவிழாவையே மிஞ்சிவிடும். மூன்று பேருக்குமே இம் மாதிரி சடங்குகளில் பெரிய பற்று ஒன்றும் கிடையாது. ஒரே ஒருமுறை அம்மாவின் திவசத்தை வைக்காமல் இருந்தது உண்டு. அதற்கு அடுத்து வந்த ஓரிரு மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா பாங்கில் ஆயிரம் ரூபாய் (அபோதெல்லாம் அது இன்றைய ஒரு லட்ச ரூபாக்கு சமம்) கணக்கில் விட்டு போயி மிகவும் அவருக்கு மன வருத்தத்தை கொடுத்தது. அது அவர்கள் அம்மாவின் திவசத்தை அவர்கள் உதசீனபடுத்தியதால் வந்தது என்று அதற்கு பின்பு அவர்கள் காலம் வரை விடாமல் திவசத்தை செய்து வந்தார்கள். திவசம் செய்துவைக்க போடி அருகில் உள்ள ஆண்டிபட்டிஇல் இருந்து ஒரு வாத்தியார் வருவது வழக்கம். அவர் ஆண்டிபட்டி வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். அதுவும் ஒரு கால கட்டத்தில் நின்று போயி ... மதுரையில் நாங்கள் இருக்கும் போது மடம் என்று அழைக்கப்பட்ட இதெற்கென இருக்கும் இடத்தில செய்ய தொடங்கினார்கள். அப்படித்தான் ஒருமுறை கிருஷ்ணமூர்த்தி பெரியப்பாவிடம் இருந்து, அம்மாவின் திவசத்தை மதுரையில் செய்யலாம் என்ற ஒப்புதலை அடுத்து எங்க அப்பா மடத்திற்கு சென்று ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்தார். திவசத்தின் முதல் நாளே செல்லமா பெரியம்மாவும், பெரியப்பாவும் மதுரை வந்துவிட்டார்கள். அன்று சாயங்காலமே அப்பாவும், பெரியப்பாவும் திவசதிற்கான ஏற்பாடுகளை பார்பதற்காக மதுரை சிம்மக்கல்லில் உள்ள மடத்திற்கு போயி பார்க்கும் போது மறுநாள் திவசம் செய்துவைக்கும் பிராமணர் வராததால், பலமான முயற்சிக்கு பின்பு ஒரு கனபாடிகள் (பெரிய வாத்தியார், மிகவும் ஆசார சீலர், வயதில் மிகவும் பெரியவர்) ஒருவர் வந்து நடத்தி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தவுடன், வீட்டிற்கு மிகுந்த சந்தோசத்துடன் வந்த அப்பாவும், பெரியப்பாவும் இரவு பூரம் அதை பற்றியே பேசி கொண்டிருந்தார்கள். ஆண்டிபட்டி வாத்தியார் ரொம்ப சாதாரணம், பல கிரமங்களை அவர் விட்டு விட்டார்... அந்த குறை எல்லாம் நாளைக்கு மொத்தமாக, கனபாடிகள் நடத்தி கொடுக்க இருக்கும் திவசத்தில் தீர்ந்துவிடும், சொல்லப்போனால் நாளைக்குத்தான் அவர்கள் அம்மா ஆத்மா சாந்தி அடையும்.. என்றெலாம் பேசிவிட்டு மறுநாள் பத்து மணிக்கு போகவேண்டிய மடத்திற்கு எட்டு மணிக்கே போயி சேர்ந்தார்கள். நானும் ரகுவும் ஸ்கூல் போயி விட்டு சாயங்காலம் வந்து பார்த்த போது அப்பாவின் முகமும் சரி இல்லை, பெரியப்பாவின் முகமும் சரி இல்லை.. பின்பு அம்மாதான் மடத்தில் நடந்ததை சொன்னார்கள். அன்று திவசம் நடக்கும் போது .. கனபாடிகள் திவச ஆரம்பத்தில், நீங்கள் எந்த வேதம் என்ற கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அப்பா ஒரு வேதமும், பெரியப்பா ஒரு வேதமும் சொல்ல, கனபாடிகள் அப்போதே எரிசல் ஆகி இருக்கிறார். ஒரு வழியாக சமாளித்து வேதத்தை சொல்ல, அதன்பின்பு திவசத்தின் முடிவில் விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டா என்று கேட்க, அம்மாவும், பெரியம்மாவும் உண்டு என்று உண்மையை சொல்ல, கனபாடிகளுக்கு வந்ததே கோபம்... என்னயா இது? இந்த வேதத்திற்கு விளக்கு கிடையாதே!! நீங்க எல்லாம் உண்மையான பிராமணர்கள்தானா? ஏன்யா சாக போர நேரத்துல என் உயிரை வாங்குறீங்க? உங்க அம்மா இறந்து இருபது வருசத்துக்கு மேல ஆயிடுச்சுன்னு சொல்லறீங்க, ஆனா இன்னும் உங்க வேதம் கூட தெரியவில்லையே என்று மடார், மடார் என்று தலையிலேயே அடித்து கொண்டாராம்!!. பெரியப்பாதான் பயந்து போயி "வாடா போய்டலாம், செத்து கித்து போய்ட போறான், வந்துடறா என்று முடித்தும், முடிகாமலும் ஓடி வந்துடாங்கலாம்... அதிலிருந்தே நம்ம குடும்பத்து குடும்ப உறுதி மொழி "LESS மந்திரம் MORE MONEY".
Subscribe to:
Post Comments (Atom)

Maama
ReplyDeleteindha post ellam pottu yen namma kudumba maanatthai vaangareenga?
vazhakkama naan unga ella postum en veettukkaararukku paditthu kaattuvadhu vazhakkam. but indha vaatti.. saari. idhey range la ivanga innum ennellam mishtake panni iruppaangalo?
உம்மைய சொல்லுறது ஒரு குத்தமாயா?!!!
ReplyDeleteWhen are we expecting a fresh post?
ReplyDeleteVery intersting!! So finally neenga entha vedam ;-))
ReplyDelete- Deepa