Wednesday, October 7, 2009

அப்பா.. அவர் நம்ம தோஸ்த். அவர் சிரிக்காம, நம்மள சிரிக்க வைப்பாரு. இனிக்குim நம்ம சொந்தம், பந்தம் எல்லாம் நம்மள அவ்விங்க ஆட்டயில சேத்துகிரைங்கன்னா, அது அவராலதான். சினிமா, அரசியல் எத பத்தி வேணுமுனாலும் அவர் கிட்ட பேசலாம், ப்ரீயா... நம்ம குடும்பத்துல அம்புட்டு பேறும் வேலைக்கு போறவங்க.. நான் மட்டும் பிசினஸ் செய்றேன்னு சொன்னப சரிடா தம்பிநாரு.. அதுதான் எங்க நைனா... அது மட்டும் இல்ல நானும் ரகுவும் இளந்தாரி பயலுகலா இருக்குறப்ப... சொன்னா சிரிகதீங்க...ரகு பயல சினிமால சேர்க்கணும்னு ரொம்ப ஆசை அவருக்கு... நல்லா பாடுறான், நல்லா நடிகிறான் (ஸ்கூல் நாடகத்துல எல்லாம் சூப்பரா நடிப்பான்) அப்படினு அவருக்கு ஒரு ஆசை!
ஆபீஸ் போய்ட்டு, வீட்டுக்கு வந்துட்டா, முகத்த கழுவி, திருநூறு பூசி, சாமி கும்பிட்ட்டு வாங்கடா பசங்களானு கட்டிகிருவரு ... கொஞ்சம் திருநூறு, கொஞ்சம் ஆஸ்பத்திரி மருந்து வாட சேர்ந்து அடிக்கும் ... நடு வகுடு, சிரிச்ச மொகம், ஜாலியான பேச்சு, சுத்தமான கை நகங்கள் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்ல) ஒரு கால்ல, வளைந்த பெருவிரல் நகம் ... எத மறக்க? எத நினைக்க?

யார் சொன்னா? அவர் இல்லைன்னு? எனக்கு நம்பிக்கை இருக்கு, அவர் ஏதோ ஊருக்கு போய் ஊசி போட போய் இருகாரு, இதோ இப்ப வந்துருவாரு...

4 comments:

  1. very touching and nice post. but is this all you have to share about kutti thatha? pls write a series of posts about him. it will bring to light many unknown things about him to people like me. All I knew of him was that he had a great sense of humour. Dint know that he wanted to make Raghu mama a star.. Hello, Raghu mama, wake up waiting for your post as well..
    Good show .. keep it up..
    cheers
    Ananya

    ReplyDelete
  2. எத சொல்ல... எத விட... பார்க்கலாம்... எல்லோரையும் பத்தி எழுதலாம்னு... நடு நடுவே அப்பாவும் வருவார்.

    ReplyDelete
  3. that is a nice way.. also visit my blog.
    http://ananyathinks.blogspot.com

    ReplyDelete
  4. waiting for your post... seekkiram podunga.

    ReplyDelete