Wednesday, October 21, 2009

திருப்பங்களும் ... தீர்வுகளும்

மனித வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை கவனித்து பார்த்த போது எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தது... முக்கியமாக, பெரிய திருப்பங்களுக்கு சிறிய காரணங்களே விதையாக இருப்பதையும், அவற்றை நாம் கவனிகாமலோ அல்லது கவனித்தவற்றை மிக விரைவில் மறந்தோ விடுகிறோம். அவ்வாறு விட்டுவிடாமல் அவற்றை நமது கவனத்தில் ஏற்றி வைத்துகொண்டால், எதிர் வரும் காலங்களில் நமது வாழ்வில் ஏற்படும் எதிர்மறை திருபங்களின் போது, அதிலிருந்து நம்மை காப்பற்றிக்கொள்ள இந்த பயிற்சி உதவும். நான் அவதானித்த சில திருப்பங்களும், அவற்றுக்கு காரணமாக இருந்த மிகசாதாரணமான காரணங்கள் இரண்டை மட்டும் இங்கே சொல்கிறேன்.
அப்போது நானும், ரகுவும் +1 படித்துக்கொண்டு இருந்தோம். எங்களது பெரியம்மா பையன் சீனு +2 படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கும் அன்றுதான் exam result வந்திருந்தது. அன்று சாயங்காலம் நானும் ரகுவும் அவன் வீட்டிற்கு சென்று அவனை பார்த்து விட்டு வரலாம் என்று போயிருந்தோம். அவனும் நல்ல mark வாங்கி இருந்தாலும் engineering சேர்வதற்கு வேண்டிய mark வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தான். அப்போதெல்லாம் private engineering college கிடையாது. சீட் கிடைப்பது பெரிய விஷயம். நாங்கள் மூவரும் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது அவனுடைய friend ஒருவன் ஒரு சிறிய cycle ல் வந்தான். அப்போதுதான் குளித்திருபான் போல.. அமைதியான அவனுடைய முகத்தில் தெரிந்த பெருமிதமே அவனுடைய நல்ல mark -ஐ சொல்லியது. இரண்டு மூன்று college -ல் seat கிடைக்கும் என்றாலும், எந்த college -ஐ select செய்வது என்று தெரியவில்லை என்றும், தனக்கு கோயம்புத்தூரில் உள்ள PSG -ல் படிக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாகவும் சொன்ன அவனுடைய அன்றைய பேச்சும், body language -ம் எனக்குள், நாமும் engineering college சேர வேண்டும் என்ற கனவை விதைத்து வளர்ததை என்னால் இன்று உணர முடிகிறது. அதன் பின்பு அவனை நான் சந்திக்கவே இல்லை. எனக்கு திருப்பத்தை ஏற்படுத்தவே பிரசன்னம் கொடுத்திருப்பான் போல.
இரண்டாவதாக .... செல்ல மகள் சுபாசினி பிறந்த ஆறு மாதத்தில் இருந்து "கை கட்டை விரல் சூப்பும்" பழக்கத்தை ஆரம்பித்தாள். நாங்களும் பல வழிகளில் முயற்சித்தும் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இப்படியே நாட்கள் ஓடிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்பவர்கள் எல்லோரும் எப்படியாவது நிறுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு தெரிந்த வழிகளில் ஒன்றை சொல்லிவிட்டு செல்வார்கள். அவளுடைய சூப்பிய கட்டை விரலும் புண்ணாகி வீங்க தொடங்கி விட்டது. நாங்கள் மிகவும் கவலை அடைய ஆரம்பித்தோம். இப்படியே போய் கொண்டு இருந்த போது... எங்க தெருவிற்கு அடுத்த தெருவில் ஒரு பையனுக்கு காதுகுத்தும் விழா நடந்தது.. அவர்கள் அழைப்பின் பேரில் சுபஷிணியோடு நாங்களும் சென்றிருந்தோம். அந்த குட்டி பையனுக்கு காது குத்தும் போது, சுபாஷினி என்னிடம், அந்த பையனுக்கு என்ன செய்கிறார்கள் என்றாள்.. அதற்கு நான், "அந்த குட்டி பையன் விரல் சூப்புரானாம் அதனால் அவன் காதை குத்துறாங்க" என்றேன் குத்து மதிப்பாக... உடனே, வாயிலிருந்து விரலை எடுத்தவள் தான்.. பின்பு போடவே இல்லை.. அன்று இரவு தூக்கத்தில் அவளையும் அறியாமல் விரலை வாய்கருகில் கொண்டு சென்றாலும், சட்ரென்று எடுத்து விடுவாள். இரண்டு நாட்களுக்கு அதை மறக்க படாதபாடுபட்டாள். தூக்கம் வராமல் அழுதாள்... அழுத களைப்பில் தூங்கினாள். என்றாலும் நாங்களே எதிர்பாராமல் ஒரே வாரத்தில் விரல் சூப்பும் பழக்கம் சுத்தமாக அவளிடம் இருந்து காணமல் போய் விட்டது. இதற்கு எல்லாம் அந்த ஒரே ஒரு சம்பவம்... ஒரே ஒரு வாக்கியம்....காரணமாக இருந்தது.

1 comment: